×

டெல்லி விமான நிலையத்தில் விமானம் தீப்பற்றியதால் அச்சம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் ேநற்றிரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற போது, திடீரென அந்த விமானம் தீப்பிடித்தது. உடனடியாக வேகமாக பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தற்போது விமானம் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘வளைகுடா நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தின் இன்ஜின்களில் ஒன்றில் இருந்து புகை வந்தது. உடனே தீயணைப்பு கருவி மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். தற்போது எவ்வித பாதிப்பும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

The post டெல்லி விமான நிலையத்தில் விமானம் தீப்பற்றியதால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Delhi airport ,New Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...